செய்திகள்
கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று
கிருஷ்ணகிரியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கொரோனா அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டினானப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வயது 61 வயது முதியவர், மற்றும் 32, 29, 51 வயதுள்ள கொண்ட பெண்கள், 30 வயது ஆண் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள், அந்தக் குடியிருப்பு பகுதியில் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கொரோனா அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர். அந்தக் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.