செய்திகள்
மரணம்

கிருஷ்ணகிரி அருகே ஒரிசா மாநிலத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி

Published On 2021-04-16 06:31 GMT   |   Update On 2021-04-16 06:31 GMT
கிருஷ்ணகிரி அருகே ஒரிசா மாநிலத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி 3-வது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி நடந்து வருகிறது.

இதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மாலை கட்டிடத்தின் 3-வது மாடியில் மேஸ்திரியாக ஒரிசா மாநிலம் கஞ்சன் மாவட்டம் ஜீரபாடி கிராமத்தை சேர்ந்த பீமாபத்ரா(47) மகன் ஜெகாபத்ரா(20) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில், அவருக்கு தலை, உடம்பு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News