செய்திகள்
தற்கொலை

வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2021-04-15 16:42 IST   |   Update On 2021-04-15 16:42:00 IST
வேதாரண்யம் அருகே மதுஅருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மணக்காடு கிராமம் பிடாரி கட்டளை தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் காளிதாஸ் (வயது 29). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தானே ஓட்டி தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. மனைவி தேன்மொழி. இவருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தையும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் காளிதாஸ் குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். அவர் மறுத்ததால் பீரோவைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு போய் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் மனைவி தேன்மொழி பக்கத்து வீட்டிற்கு சென்றபோது காளிதாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News