செய்திகள்
வேதாரண்யம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் புல்வெளி கிராம பகுதியில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டிலுள்ள தனிப்படையினர் ஆகியோர் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் கலவை மண் இருந்ததும் அந்த கலவை மண்ணை ஏற்றி வருவதற்கு எவ்வித அனுமதியும் ஆவணம் இல்லாததால் போலீசார் டிராக்டர் பறிமுதல் செய்து கரியாப்பட்டினம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
டிராக்டரை ஓட்டி வந்த கத்திரிபுலம் பகுதியை சேர்ந்த கார்த்தி வயது 20 என்பவரையும் டிராக்டருக்கு சொந்தக் காரரான தேத்தாகுடி வடக்கு மதன்மோகன் (43) என்பவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.