செய்திகள்
கொரோனா தடுப்பூசி

புதுவையில் ஆட்டோவில் அமர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட மூதாட்டிகள்

Published On 2021-04-12 13:44 GMT   |   Update On 2021-04-12 13:44 GMT
80 வயது மூதாட்டிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை சுகாதார பணியாளர்கள் பாராட்டினார்கள்.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதுவை மாநிலம் முழுவதும் நேற்று முதல் வருகிற 14-ந்தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது.

இதற்காக அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் என 100 இடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

மொத்தம் 14 லட்சம் மக்கள் தொகை உள்ள புதுவை மாநிலத்தில் 92 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக விளங்க 80 வயதை கடந்த குயவர்பாளையம் வேதவள்ளி, வாசுகி, தனலட்சுமி ஆகியோர் பாக்குமுடையான் பேட்டை அரசு பள்ளி முகாமிற்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஆட்டோவில் வந்தனர்.

அவர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக சுகாதார ஊழியர்கள் ஆட்டோவில் அமர்ந்திருக்கும் படி கூறி கொரோனா தடுப்பூசி போட்டனர்.

இது தொடர்பான புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

80 வயது மூதாட்டிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை சுகாதார பணியாளர்கள் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News