செய்திகள்
பணம் கொள்ளை

அரும்பார்த்தபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

Published On 2021-04-12 15:43 IST   |   Update On 2021-04-12 15:43:00 IST
அரும்பார்த்தபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூலக்குளம்:

புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் வில்லியனூர் மெயின்ரோட்டில் செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கடந்த 9-ந் தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு வந்தார்.

அப்போது அங்கு இருந்த பக்கவாட்டு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் ரூ.1 லட்சம் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News