செய்திகள்
பாண்டி மெரினா கடற்கரை

திறந்தவெளி பாராக மாறிய பாண்டி மெரினா கடற்கரை

Published On 2021-04-10 06:31 GMT   |   Update On 2021-04-10 06:31 GMT
பாண்டி மெரினா கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்களால் சிதறி கிடக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் அங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களுக்காக 5-க்கும் மேற்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் இளைப்பாறுவதுடன், கடலின் அழகையும் ரசிப்பார்கள்.

சமீபகாலமாக பாண்டி மெரினா கடற்கரை திறந்தவெளி பாராக மாறி வருகிறது. பகல் நேரத்தில் இளைஞர்கள் மதுபாட்டில்கள் வாங்கி வந்து குடில்களில் அமர்ந்து குடிக்கின்றனர். அந்த பாட்டில்களை அங்கே போட்டுவிட்டு செல்கிறார்கள். சிலர் மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்கிறார்கள். இதனால் கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்களால் சிதறி கிடக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் பாண்டி மெரினா கடற்கரைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

எனவே பாண்டி மெரினா கடற்கரையில் அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News