செய்திகள்
புதுவையில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
புதுவையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும், பஸ்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
* திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். பஸ்களில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
* அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம். முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விழாக்கள் நடத்தும்போது அடுத்த இருக்கை காலியாக இருக்கும்படி 50 சதவீத கூட்டம் மட்டுமே இருக்க வேண்டும்.
* கடைகள், மால்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூடும் இடத்தில் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
* நீச்சல் குளம் போன்ற இடங்களில் பயிற்சி பெறுவோரை மட்டும் அனுமதிக்க வேண்டும். ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். அதிகமாக தொற்று கண்டறியப்படும் பகுதிகளில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.
* கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். பிரதமர் கூறியதை போல வருகிற 14-ந் தேதி வரை புதுவையில் தடுப்பூசி திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கவர்னர் தமிழிசை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தலைமை செயலர் அஸ்வனிகுமார், சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
* திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். பஸ்களில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
* அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம். முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விழாக்கள் நடத்தும்போது அடுத்த இருக்கை காலியாக இருக்கும்படி 50 சதவீத கூட்டம் மட்டுமே இருக்க வேண்டும்.
* கடைகள், மால்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூடும் இடத்தில் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
* நீச்சல் குளம் போன்ற இடங்களில் பயிற்சி பெறுவோரை மட்டும் அனுமதிக்க வேண்டும். ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். அதிகமாக தொற்று கண்டறியப்படும் பகுதிகளில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.
* கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். பிரதமர் கூறியதை போல வருகிற 14-ந் தேதி வரை புதுவையில் தடுப்பூசி திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.