செய்திகள்
தற்கொலை

உடையார்பாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-04-05 12:23 GMT   |   Update On 2021-04-05 12:23 GMT
உடையார்பாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மனைவி ரஞ்சனி(வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சனி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் ரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சனி நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் லாரன்ஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து குடிபோதையில் ரஞ்சனியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது, விசாரணையில் தெரியவந்ததாகவும், போலீசார் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News