செய்திகள்
கோப்புபடம்

ராஜபாளையம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 150 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2021-04-03 10:59 GMT   |   Update On 2021-04-03 10:59 GMT
ராஜபாளையம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் மாலையாபுரம் அருகே பறக்கும் படை அலுவலர் பங்கஜம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்த போது, அதில் 150 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ டிைரவர் மாலையாபுரத்தை சேர்ந்த முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதன்மதிப்பு ரூ.21 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. மது பாட்டில்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News