செய்திகள்
தற்கொலை

திருபுவனையில் விஷம் குடித்து பூசாரி தற்கொலை

Published On 2021-04-03 05:53 IST   |   Update On 2021-04-03 05:53:00 IST
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து பூசாரி தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை:

திருபுவனை பேங்க் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 67). கோவில் பூசாரி. இவரது மனைவி சுந்தரி (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு சுந்தரி இறந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட புருஷோத்தமன், நேற்று முன்தினம் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கலிதீர்த்தாள்குப்பம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் உதவி சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News