செய்திகள்
கைது

சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-04-02 13:35 GMT   |   Update On 2021-04-02 13:35 GMT
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 26), முனியாண்டி (53) உள்பட 3 பேர் தளவாடி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திக்கொண்டு வந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் ஓடிவிட்டார். இதையடுத்து சரவணன், முனியாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News