செய்திகள்
கோப்புபடம்

அஞ்செட்டியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா

Published On 2021-04-02 11:48 GMT   |   Update On 2021-04-02 11:48 GMT
அஞ்செட்டியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள அத்தி நத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் அஞ்செட்டி டாக்டர் அசோக் மற்றும் மருத்துவ குழுவினர் பெண்கள் விடுதியில் தங்கி உள்ள மாணவி உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

அவருக்கு வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மருத்துவ குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News