செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் தினமும் மணியடித்து பூஜை செய்யும் குரங்கு

ஆஞ்சநேயர் கோவிலில் தினமும் மணியடித்து பூஜை செய்யும் குரங்கு

Published On 2021-04-01 11:29 IST   |   Update On 2021-04-01 11:29:00 IST
ஆஞ்சநேயர் கோவிலில் குரங்கு மணியடித்து பூஜை செய்வது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் குறுகிய வளைவு அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் மதியம் 3 மணி அளவில் குரங்கு ஒன்று மணி அடித்து பூஜை செய்து கொண்டிருந்தது. இதை அவ்வழியாக சென்ற பயணிகள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

இதேபோல் நேற்றும் குரங்கு மணி அடித்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த பயணிகள் அங்கு திரண்டு மணி அடிக்கும் காட்சியை தங்களது செல்போனில் படம் எடுத்தனர். ஆஞ்சநேயர் கோவிலில் குரங்கு மணியடித்து பூஜை செய்வது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.

Similar News