செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 19 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 72 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 285 பேர் உயிரிழந்து உள்ளனர்.