செய்திகள்
வடமலம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
வடமலம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி தாலுகா பட்டகாப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அவர் வடமலம்பட்டி பகுதியில் கட்டிடம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை மின்சார வயரில் பட்டது.
இதில் மின்சாரம் தாக்கி முருகேசன் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.