செய்திகள்
தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-30 18:46 IST   |   Update On 2021-03-30 18:46:00 IST
உத்தனப்பள்ளி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அஞ்சலகிரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லகுமம்மா (வயது 31). சுப்பிரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லகுமம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News