செய்திகள்
புதுவையில் ஒரே நாளில் 2 பேர் கொரோனாவுக்கு பலி
புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கடந்த 2019 டிசம்பர் மாதம் கொரோனா பரவ தொடங்கியது.
2020 மார்ச்சில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
கடந்த சில மாதமாக சகஜநிலை திரும்பியது. இந்நிலையில் கொரோனா 2-வது அலை வீச தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கிய கொரானாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பாதிப்பு இருந்தது.
இத்தகைய சூழலில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் 20, 40, 60 என படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளது.
புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 87, காரைக்காலில் 32, ஏனாமில் 6, மாகியில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் தற்போது 184, காரைக்காலில் 40, மாகியில் 2 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 11, காரைக்காலில் 3, மாகியில் 3 பேர் என 17 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 40 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 226 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 380 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 228, காரைக்காலில் 94, ஏனாமில் 8, மாகியில் 30 பேர் என 360 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 586 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 677 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் காரைக்காலை சேர்ந்த 80 வயது முதியவர், 73 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 679 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முக கவசம், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கடந்த 2019 டிசம்பர் மாதம் கொரோனா பரவ தொடங்கியது.
2020 மார்ச்சில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
கடந்த சில மாதமாக சகஜநிலை திரும்பியது. இந்நிலையில் கொரோனா 2-வது அலை வீச தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கிய கொரானாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து விரல் விட்டு எண்ணும் அளவுக்கே பாதிப்பு இருந்தது.
இத்தகைய சூழலில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் 20, 40, 60 என படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளது.
புதுவையில் நேற்று 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 87, காரைக்காலில் 32, ஏனாமில் 6, மாகியில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் தற்போது 184, காரைக்காலில் 40, மாகியில் 2 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 11, காரைக்காலில் 3, மாகியில் 3 பேர் என 17 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 40 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 226 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 380 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 228, காரைக்காலில் 94, ஏனாமில் 8, மாகியில் 30 பேர் என 360 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 586 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 677 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் காரைக்காலை சேர்ந்த 80 வயது முதியவர், 73 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 679 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முக கவசம், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அறிவுறுத்தி உள்ளார்.