செய்திகள்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர் கைது
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தீவிர ரோந்துப்பணியில் போலீசாா் ஈடுபட்டுள்ளனர். அணைக்கரை மேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த காத்தவராயன் (வயது 31) என்பவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கேட்டு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து காத்தவராயனை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் அவரிடமிருந்து ரூ.29 ஆயிரம் ரொக்கம், 6 துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.