செய்திகள்
கல்லல் அருகே பரபரப்பு : ஒரே வகுப்பில் 3 மாணவர்களுக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய வைத்துள்ளது.
கல்லல்:
ஒரே வகுப்பில் படித்து வரும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய வைத்துள்ளது.
இதை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து நேற்று பள்ளியில் சக மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பிளஸ்-1 படிக்கும் இன்னொரு மாணவிக்கும், மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே வகுப்பில் படித்துவரும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
பின்னர் அந்த பள்ளியில் படித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கூட பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அது மட்டுமின்றி அந்த பள்ளி செயல்பட்டு வரும் ஊரிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த பள்ளியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் யசோதாமணி ஆகியோர் பார்வையிட்டனர்.
ஒரே வகுப்பில் படித்து வரும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய வைத்துள்ளது.
இதை தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து நேற்று பள்ளியில் சக மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பிளஸ்-1 படிக்கும் இன்னொரு மாணவிக்கும், மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே வகுப்பில் படித்துவரும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
பின்னர் அந்த பள்ளியில் படித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கூட பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அது மட்டுமின்றி அந்த பள்ளி செயல்பட்டு வரும் ஊரிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த பள்ளியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் யசோதாமணி ஆகியோர் பார்வையிட்டனர்.