செய்திகள்
அபராதம்

சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் அபராதம்

Published On 2021-03-20 15:38 IST   |   Update On 2021-03-20 15:38:00 IST
சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மயிலாடுதுறை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை:

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இந்த கொரோனா நோய்தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

அதன்படி மயிலாடுதுறை நகரில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து வரவேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் வரும்போது கிருமிநாசினி கொண்டு கைசுத்தம் செய்யும் வசதி செய்திட வேண்டும்.

இதனை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுப்பையா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News