செய்திகள்
தினகரன்

காங்கிரஸ் ஆட்சி கவிழ திமுக தான் பிள்ளையார் சுழி போட்டது- தினகரன் குற்றச்சாட்டு

Published On 2021-03-20 15:35 IST   |   Update On 2021-03-20 15:35:00 IST
புதுவைக்கு மாநில அந்துஸ்து வழங்குவதில் மத்திய பா.ஜனதா அரசும், மாநில காங்கிரஸ் அரசும் மக்களை ஏமாற்றி விட்டன என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் அ.ம.மு.க. வேட்பாளர் அறிமுகம், பிரசார பொதுக்கூட்டம் ரோடியர் மில் திடலில் நடந்தது.

கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் 5.15-மணிக்கு மேடைக்கு வந்தார். அவர் வந்தவுடன் புதுவை தலைவர் வேல்முருகன் 10 நிமிடம் வரவேற்று பேசினார்.

இதனைத்தொடர்ந்து தினகரன் பேசினார். அவர் பேசியதாவது:-

புதுவைக்கு மாநில அந்துஸ்து வழங்குவதில் மத்திய பா.ஜனதா அரசும், மாநில காங்கிரஸ் அரசும் மக்களை ஏமாற்றி விட்டன. 30 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன் என்று கூறி தி.மு.க.தான் புதுவை அரசு கவிழ பிள்ளையார் சுழி போட்டது.

மாநில அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துணையாக இருக்கும் தி.மு.க.வும், பா.ஜனதாவுக்கு துணையாக இருக்கும் அ.தி.மு.க.வும் எந்தவித பதிலும் கூறாமல் வேடிக்கை பார்க்கின்றன. இவர்களை விரட்ட வேண்டும். அதற்கு அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

எங்கள் அணி வெற்றி பெற்றால் மாநில முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

5 நிமிடத்தில் பேச்சை முடித்துவிட்டு கிளம்ப நினைத்தபோது எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், தங்கள் வேட்பாளர்கள் பெயர்களையும் வாசியுங்கள் என கோ‌ஷமிட்டனர். இதனால் அந்த கட்சியின் பட்டியலையும் படித்து விட்டு, போதுமா? என கேட்டுவிட்டு அங்கிருந்து 5.30-க்கு புறப்பட்டார்.

முக கவசத்சை கழற்றாமல் 5 நிமிடம் மட்டுமே அவர் பேசி சென்றதால் வேட்பாளர்கள் சோகமடைந்தனர். மாலை 5.40 மணிக்கே கூட்டமும் கலைந்து சென்றது. இசை குழுவினர் தொடர்ந்து கச்சேரியை தொடர்ந்தனர்.

Similar News