செய்திகள்
ஓசூர் அருகே வடமாநில தொழிலாளி தற்கொலை
ஓசூர் அருகே வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஒடிசா மாநிலம் மங்கல்பூரை சேர்ந்தவர் தகீரா ராணா (வயது 33). இவர், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் அங்கு தொடர்ந்து பணி செய்ய விருப்பமின்றி இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தகீரா ராணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.