செய்திகள்
பட்டாசு விற்பனைக்கு தடை

பட்டாசு விற்பனைக்கு தடை- அதிகாரி உத்தரவு

Published On 2021-03-20 09:50 IST   |   Update On 2021-03-20 09:50:00 IST
புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு வெடிமருந்து தயாரிப்பதற்கும், வைத்துக்கொள்வதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
புதுச்சேரி:

புதுவை துணை மாவட்ட தேர்தல் அதிகாரி சக்திவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி வெடிப்பொருட்கள், வெடி மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு வெடிமருந்து தயாரிப்பதற்கும், வைத்துக்கொள்வதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி வருகிற 23-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையும் மற்றும் மே 1-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையும் இந்த தடை அமலில் இருக்கும். இதை மீறுவோரின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். உரிய சட்ட விதிமுறைகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கைப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News