செய்திகள்
குத்தாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
குத்தாலம் அருகே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குத்தாலம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மருத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாந்தி தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் கார், வேன், பஸ் உள்பட அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.