செய்திகள்
தற்கொலை

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் வெல்டிங் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-03-19 16:14 IST   |   Update On 2021-03-19 16:14:00 IST
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் வெல்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சொக்கநாதன் பேட்டை தெற்கு அணைக்கரை வீதியை சேர்ந்தவர் குமார் (வயது39). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் குடி பழக்கத்துக்கு அடிமையான குமார் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி புவனேஷ்வரி தட்டிக்கேட்டார். அதற்கு அவர் பதில் ஏதும் பேசாமல் வீட்டின் கழிவறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார்.

வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் கழிவறையின் மேற்புறம் உள்ள திறந்தவெளியில் பார்த்த போது குமார் துப்பட்டாவால் அங்கிருந்த இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார்.

தூக்கில் இருந்து மீட்டு புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புவனேஸ்வரி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News