செய்திகள்
தற்கொலை

கல்லாவி அருகே பெண் தற்கொலை

Published On 2021-03-19 15:37 IST   |   Update On 2021-03-19 15:37:00 IST
கல்லாவி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:

ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலையை சேர்ந்ததவர் இன்பரசன். இவரது மனைவி அமுதவள்ளி (வயது 33). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் அமுதவள்ளி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அமுதவள்ளி விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமுதவள்ளி இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News