செய்திகள்
கோப்புபடம்

விருதுநகர் அருகே பணம் திருடிய பெண் கைது

Published On 2021-03-18 23:41 IST   |   Update On 2021-03-18 23:41:00 IST
விருதுநகர் அருகே பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.2,100 கைப்பற்றினர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறை சேர்ந்தவர் செல்வி (வயது 48). இவர் விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் அக்னிச்சட்டி எடுப்பதற்காக கோவிலுக்கு வந்து காப்புக் கட்டினார். அப்போது பையில் இருந்த ரூ.2,100-ஐ அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் எடுத்தபோது செல்வியும் அவரது மகள்களும் கையும் களவுமாக பிடித்து இந்நகர் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த அபூர்வம்மாள் (50) என தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.2,100 கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News