செய்திகள்
ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளியை சேர்ந்தவர் மணி (வயது 38). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவருடைய வீட்டில் மின்சாரம் இல்லை. இதனால் சுவிட்ச் பாக்ஸ் திறந்து பார்த்த போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மணி இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.