செய்திகள்
தற்கொலை

குருபரப்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-03-17 18:14 IST   |   Update On 2021-03-17 18:14:00 IST
குருபரப்பள்ளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News