செய்திகள்
தற்கொலை

கணவருடன் தகராறு- எலிமருந்து தின்று பெண் தற்கொலை

Published On 2021-03-17 02:40 IST   |   Update On 2021-03-17 02:49:00 IST
புதுவையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மூலக்குளம்:

முத்திரையர்பாளையம் பாம்பாட்டி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (36). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த காமாட்சி வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

இதில் மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News