செய்திகள்
விபத்து பலி

வேளாங்கண்ணி அருகே சரக்கு ஆட்டோ மோதி மாணவர் பலி

Published On 2021-03-16 19:30 IST   |   Update On 2021-03-16 19:30:00 IST
வேளாங்கண்ணி அருகே சரக்கு ஆட்டோ மோதி தாய் கண் முன்னே மாணவர் பலியானார்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி கோகிலா. இவர்களுடைய மகன் சிவசந்தோ‌‌ஷ் (வயது12). இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்இந்த நிலையில் நேற்று கோகிலா மற்றும் சிவசந்தோ‌‌ஷ் ஆகிய 2 பேரும் பிரதாபராமபுரம் கழுவன்குளம் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி பொரி ஏற்றி கொண்டு வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக 2 பேர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவசந்தோ‌‌ஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோகிலா படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவசந்தோ‌‌ஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த கோகிலாவை சிகிச்சைக்காகவும் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுதொடர்பாக கிழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் விஜயஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஸ்ரீவத்சன் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தாய் கண்முன்னே மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்பத்தி உள்ளது.

Similar News