செய்திகள்
மத்திகிரி அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
மத்திகிரி அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் அருகே உள்ள கொண்டப்பநாயனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று அவர் பஸ்சில் பேளகொண்டப்பள்ளி பக்கமாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பஸ்சில் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார் (23) என்பவர் பொருட்களுடன் வந்தார். அதற்கும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கூறினார். இதற்கு கவுரவ் குமார் மறுத்து தகராறு செய்து கண்டக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரவ்குமாரை கைது செய்தனர்.