செய்திகள்
கைது

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது

Published On 2021-03-14 09:03 GMT   |   Update On 2021-03-14 09:03 GMT
நாகையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பணியை முடித்து விட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார். அப்போது அங்கு குடியிருக்கும் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் சிவக்குமார்(வயது33) திடீரென பிரவீனாவை தடுத்து நிறுத்தி கீழே தள்ளினார். பின்னர் கன்னத்தில் கடித்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

அதிர்ச்சியடைந்த பிரவீனா அவரிடமிருந்து தப்பியோடி நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News