செய்திகள்
போலீசார் வாகன சோதனை

மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை- தேர்தல் அதிகாரி உத்தரவு

Published On 2021-03-14 09:47 IST   |   Update On 2021-03-14 09:47:00 IST
காரைக்கால் உள்ளே வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குட்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால்:

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அனைத்து வாக்குச்சாவடிகளையும், மாநில எல்லையிலும் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார்.

இந்தநிலையில் அம்பகரத்தூர், கண்ணாப்பூர், அன்னவாசல் மற்றும் குளக்குடி ஆகிய மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அர்ஜூன் சர்மா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரிடம் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை, காரைக்கால் உள்ளே வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News