செய்திகள்
தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

வீடுகளை மாற்று இடத்தில் கட்டக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-03-13 17:04 IST   |   Update On 2021-03-13 17:04:00 IST
அகஸ்தியம்பள்ளியில் குடிசை மாற்றுவாரியம் மூலம் கட்டப்படும் வீடுகளை மாற்று இடத்தில் கட்டக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியை சேர்ந்த அகஸ்தியம்பள்ளி, மேலக்காடு மற்றும் கைலவனம் பேட்டை பகுதிகளில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.83 கோடி செலவில் 816 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வீடுகள் கட்டப்படும் இடங்கள் வடிகால் பகுதிகளாகவும், அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களாகவும், உப்பு தன்மையான உப்பள பகுதிகளாகவும் உள்ளன. எனவே இந்த இடங்களில் வீடுகள் கட்ட கூடாது. மாற்று இடத்தில் வீடுகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தி அகஸ்தியன்பள்ளியில் மரப்பாலம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் அன்பரசு தலைமை தாங்கினார். இதில் வக்கீல் வெங்கடேஸ்வரன், கிளை செயலாளர் நாகராஜன், ஆரோக்கியநாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Similar News