செய்திகள்
கைது

சிவகாசி அருகே மது விற்றவர் கைது

Published On 2021-03-13 15:44 IST   |   Update On 2021-03-13 15:44:00 IST
சிவகாசி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ரிசர்வ்லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த குருவையா (வயது 40) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், குருவையாவை கைது செய்தனர்.

Similar News