செய்திகள்
கோப்பு படம்.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா

Published On 2021-03-12 21:13 GMT   |   Update On 2021-03-12 21:13 GMT
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 14 ஆயிரத்து 939 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். 14 ஆயிரத்து 696 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 93 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News