செய்திகள்
சத்தியமங்கலத்தில் விவசாயிடம் ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.18 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 4 ரோடு தொப்பம் பாளையம் என்ற பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் என்பவர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவரிடம் ரூ.85 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் பணத்துக்கான ஆவணங்கள் கேட்டனர். அதற்கு சிவசங்கர் தான் வளர்த்த கோழிகளை ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்து விட்டு பணத்தை கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனாலும் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.18 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 4 ரோடு தொப்பம் பாளையம் என்ற பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் என்பவர் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் வந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவரிடம் ரூ.85 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் பணத்துக்கான ஆவணங்கள் கேட்டனர். அதற்கு சிவசங்கர் தான் வளர்த்த கோழிகளை ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்து விட்டு பணத்தை கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனாலும் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.18 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.