செய்திகள்
கைது

கோபிசெட்டிபாளையத்தில் வாகன சோதனையில் 131 மதுபாட்டில்கள் சிக்கியது- வாலிபர் கைது

Published On 2021-03-01 05:57 GMT   |   Update On 2021-03-01 05:57 GMT
கோபிசெட்டிபாளையத்தில் வாகன சோதனையில் 131 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 131 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பறக்கும் படையினர் கார் மற்றும் மதுபாட்டிலை சிறுவலுர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் மதுபாட்டில்கள் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் இருந்து கோபி பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சசிவர்ணம் (28) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News