செய்திகள்
விபத்து பலி

மாதுராப்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2021-02-27 13:48 GMT   |   Update On 2021-02-27 13:48 GMT
மாதுராப்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வேம்பனூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் மாதுராப்பட்டி நெடுங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த விராலிமலை போலீசார், முருகேசன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முருகேசன் உறவினர்கள், நாங்கள் வருவதற்குள் உடலை எப்படி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News