செய்திகள்
படகு

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2021-02-23 04:50 GMT   |   Update On 2021-02-23 04:50 GMT
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் வெயில் சுட்டெரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Tags:    

Similar News