செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வாலிபர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அலேநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கப்பா (வயது 33). பெயிண்டர். சம்பவத்தன்று அவர் வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
அதை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இதை கவனித்த ரங்கப்பா அந்த நபரை மடக்கி பிடித்து தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பென்னங்கூரை சேர்ந்த முருகேசன் (24) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.