செய்திகள்
விபத்து

ராஜபாளையம் அருகே ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Published On 2021-02-20 10:17 GMT   |   Update On 2021-02-20 10:17 GMT
ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜபாளையம்:

ராஜபாளையத்தை அடுத்த ஜமீன் நத்தம்பட்டி மீனாட்சிபுரம் காலனியை சேர்ந்தவர் சங்கிலியாண்டி மகன் கருப்பையா (வயது36). மலையடிப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர் புதிய பஸ் நிலையம் எதிரே இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கணேசனை (42) கைது செய்தனர்.
Tags:    

Similar News