செய்திகள்
நாகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
நாகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகூரைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவருடைய மகன் பொன்னியின் செல்வன் (வயது28). இவர் நாகை-திருவாரூர் சாலையில், நாகை பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச்செல்ல முயன்றாா். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பொன்னியின் செல்வனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பொன்னியின் செல்வன் உயிரிழந்தார். பொன்னியின் செல்வன் பஸ்சில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாரா? என நாகை டவுன்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.