செய்திகள்
பட்டாசு ஆலை விபத்து (கோப்பு படம்.)

பட்டாசு ஆலை விபத்து- விசாரணை நடத்த 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

Published On 2021-02-18 15:56 GMT   |   Update On 2021-02-18 15:56 GMT
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 8 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். இதுதொடர்பாக பட்டாசு ஆலை குத்தகைக்காரர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த பட்டாசு பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 8 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News