செய்திகள்
விபத்து பலி

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2021-02-17 14:53 GMT   |   Update On 2021-02-17 14:53 GMT
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது70). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மதியம் இவர் அந்த ஊர் சிவன் கோவில் பகுதியில் இருந்து மெயின் ரோட்டை கடந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மாரியப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News