செய்திகள்
கோப்புபடம்

சீர்காழி உப்பனாற்றங்கரை அருகே மீன் கடை அமைப்பதை தடை செய்ய வேண்டும் - பாஜக கூட்டத்தில் தீர்மானம்

Published On 2021-02-14 13:43 GMT   |   Update On 2021-02-14 13:43 GMT
சீர்காழி உப்பனாற்றங்கரை அருகே மீன் கடை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழி:

சீர்காழியில் பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற தொகுதி இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சீர்காழி இளைஞரணி நகர தலைவர் புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட தலைவர் பாரதிகண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சீர்காழி நகர தலைவர் அருணாச்சலம், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் வினோத், மாவட்ட பொது செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சுசீந்தர், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா சமயத்தில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளின் வாடகைகளை தள்ளுபடி செய்ய நகராட்சிக்கு கோரிக்கை வைப்பது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு ரூ.1000-மும், பெண் குழந்தைக்கு ரூ.500-ம் கட்டாயமாக வசூலிப்பதை கண்டித்து சுகாதாரத்துறைக்கு புகார் மனு அளிப்பது.

சீர்காழி நுழைவு வாயிலாக உள்ள உப்பனாற்றங்கரை அருகே மீன் கடை அமைப்பதை தடை செய்ய வேண்டும். புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையங்களில் உள்ள சாக்கடைகளை சரி செய்யக்கோரி மனு அளிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News