செய்திகள்
தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2021-02-14 03:39 GMT   |   Update On 2021-02-14 03:39 GMT
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

லாஸ்பேட்டை 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஞானம் (வயது 54). தனியார் நிறுவன ஊழியர். கொரோனா ஊரடங்கு காரணமாக போதுமான வருமானமின்றி சிரமப்பட்டு வந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ஞானம், நீண்ட நேரமாக திரும்ப வரவில்லை. குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பாகூர் அடுத்த அரங்கனூரில் தனக்கு சொந்தமான காலி மனையில் உள்ள கொட்டகையில் ஞானம் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தெரிந்ததும் பாகூர் போலீசார் அங்கு சென்று ஞானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொரோனாவால் வருமானம் இழந்த ஞானம், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News