செய்திகள்
சிக்கலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
சிக்கலில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சிக்கல் கடைத்தெருவில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ஓரத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கண்ணையன் மகன் ராஜசேகர் (வயது39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.420 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.